Monday, 11 March 2019

ARTOPINION:பேரன்பு

புரிதல்  :


நீ வாழும் வாழ்க்கையின் தேடல், இயற்கையுள் தங்கியிருக்கும் நீ கொடுக்கும் வாடகையை பொருத்தது.இயக்குனர் ராம் அவர்களின் சிந்தையில் உதித்த பேரன்பின் வெளிப்பாடே இந்த படம் என்பேன்.தினம்தோறும் வாழும் வாழ்க்கையில் நாம் வாழ்வியலை மறந்து போகிறோம்.ஆண்,பெண்,திருநங்கை,களவு,கோபம்,நாய்,பூனை,செடி,அமீபா,வைரஸ்,கோள்கள்,
திசைகள் ஆகிய அனைத்திற்கும் வசிப்பிடம் ஒன்று தான்.ஐந்து உணர்ச்சி உறுப்புக்கள் வெளிப்படுத்தும் சிந்தனை திரவியத்தின் கலவையே-நாம்.இவை அனைத்துமே இயற்கையுள் அடங்கும்.இயற்கை என்பது மறுதலிப்பது ,புதிரானது ,கரை சேர்ப்பது ,கற்பனைக்கு அப்பாற்பட்டது.இந்த அளவு கோளில் காலமும் பொருந்தும் .இயக்குனர் ராம் அவர்களின் "பேரன்பு" அப்படிப்பட்ட களங்கமில்லா உணர்வுகளை கலங்கிய மனிதர்கள் வாயிலாக பிரதிபலிக்கிறது .ராமின் "பேரன்பு" என் பார்வையில் ....

பரிதாபமும் இயற்கையும் :


மனித மனம் அமைதியான கடலில் அமாவாசை அன்று பொங்கும் அலைகள் போல.அது தன்னிலும் சிறந்தோர் என்று எண்ணுபவரை பார்த்து பொறாமை படும் ,தன் நிலையில் கீழே உள்ளோர் என்று நினைத்து சிலரை பார்த்து பரிதாப படும்,குறை தன்னிடம் இல்லை என்று உறுதியாய் நம்பும்.அவ்வண்ணமே "தன் போல் இல்லை " அல்லது " நல்ல வேளையாக தான் இல்லை " என்று எண்ணி பரிதாபம் கொண்டு உதவிட முயலும் .ஆனால் இயற்கையோ பரிதாபம் இல்லாத ஒரு பச்சோந்தி .அதற்கு மனிதன் வகுத்து வைத்த இந்த நிலைகள் தெரியாது.ராமின் படைப்பில் இந்த மனித இயல்பும் இயற்கையின் பாகுபாடின்மையும் பாத்திரங்களின் வழி பிரதிபலிக்கின்றன.இங்குள்ள அனைவருமே உடைந்த பாத்திரங்கள் தான் என்று ஒவ்வோர் நிலையிலும் இயற்கை வெளிக்காட்டும் படி பேரன்பு வெளிப்படுகிறது .


ஹார்மோனும்-இயற்கையும் :


காதல், கோபம் ,ஆசை ,அழுகை போன்று காமமும் ஓர் உணர்ச்சியே .அது பாலின வேறுபாடு கண்டு ,கண்ணின் கீழ் அகன்று ,தோள்,மார்பு ,கை,கால் ,முகம் என நீண்டு கலவியில் முடிகிறது.ஓர் உயிர் தன்னிலிருக்கும் ஆக்கும் சக்தியை உடலின் தேடல் மூலம் வெளிகொணர்கிறது .ஹார்மோன்களின் வாசிப்பில் அவரவர் காமத்தின் வீரியம் வேறுபடும்.அந்த வாசிப்பின் கோளாறுகள் தற்கால நவீன நாகிரகத்தின் வெளிப்பாடுகள்.சிந்தையால் தொடுவதும்,சிந்தித்த பின் தொடுவதும் ,சிறு தீப்பொறி தீர தொடுவதும் ,சித்ரவதை செய்து தொடுவதும் காமமே .வீரியம் தான் வேறுபடுகிறது.இதில் குடும்பம்,கலாச்சாரம்,சமூகம் என்று உறைகள் போட்டுக்கொண்டு காமம் நடனம் ஆடத்தான் செய்கிறது .இயற்கையோ பாலின பாகுபாடு இல்லாதது .அதன் காமத்திலும் காதல் உண்டு .இயற்கை தன் படைப்புகளுக்குள் பாகுபாடு பார்ப்பதில்லை.உணர்வுகளை பொதுவாய் வெளிப்படுத்தும் இயல்பாய் அனைவர்க்கும் கொடுத்துவிடும் .பேரன்பில் தேங்கிய உணர்வுகளின் வழி ,அமுதவனும் சரி ,மீராவும் சரி ,பாப்பாவும் சரி,தங்கம் என்ற ஸ்டெல்லாவும் சரி இந்த இயற்கையின் முன்னால் தத்தம் இயல்புக்குள் சிக்கி அலைகின்றனர்.நாம் அனைவருமே அவ்வாறுதான் .

சமூகமும்-இயற்கையும் :


தனி மனிதர்களால் ஆனது சமூகம் ;ஆனால் சமூகம் கூறும் வழி கட்டாயமாய் நடக்க வேண்டும்படி செய்வித்தோர் சாத்திரம் கண்ட பண்டிதர்கள் !!ஒவ்வோர் உயிரும் தனக்கான கோட்பாட்டில் வாழ ஆசை படுகிறது .அது ஏதுவாயினியும் சரி .ஒரு கண்ணாடி தொட்டிக்குள் வாழும் மீன் போல தான் நாம் அனைவரும் உலகை பார்க்கிறோம் .தன்னை போல் உள்ளோரிடம் நட்பு கொள்கிறோம்; தன் வழியாக வந்தோர் என எண்ணுவோரிடம் பாசம் பொழிகிறோம்;வரையறுக்கப்பட்ட பாதையின் வழி நியமங்கள் தவறாமல் வாழ முற்படுகிறோம்; நாம் காணாத ஒன்று தென்பட்டால் அது இயற்கைக்கு புறம்பானது என்று அதனை வெறுக்கிறோம்.ஆனால் இயற்கையோ வரையறை கடந்தது;மனிதனால் இடைப்பட்ட எல்லை கோடுக்குள் அடங்காதது.முழு நிர்வாணமாய் வசை பாடும் ஆணையும் ,மாராப்பு விலகி நிற்கும் பெண்ணையும் ,முழங்கால் அளவு உயரமுள்ள உயிர்களையும் சமமாய் பார்ப்பது.எல்லாமே இயற்கையின் படைப்புகள் தான் ,எண்ணிக்கையில் மட்டுமே வேறுபாடு .பேரன்பில் தெளியும் பாத்திரங்கள் பல நாம் அன்றாடம் கடந்து போகும் மனிதர்கள் தான் .நம் பார்வை குறுகியதாலோ என்னவோ நாம் அவர்களை பார்ப்பதில்லை .

பேரன்பும்-இயற்கையும் :


அலறும் சிந்தைக்குதான் அமைதியின் வெளிச்சம் தேவைப்படும் .கதறும் காதுகளின் வழிதான் மௌனமான அன்பின் பிரவாகம் பிறக்கும்.மனிதனாக வந்த நாம் ,என்று  நாமும் இயற்கையின் ஒரு துகள் தான் என்று மனதில் ரீங்கரிக்கிறோமோ அன்று தான் பேரன்பின் பாத்திரமாக மாற முடியும்.இயற்கை நடத்தும் நாடகத்தில் நாம் அனைவருமே உடைந்த பாத்திரங்கள் தான்,அதில் நிரப்புவதற்கு ஏதும்  இல்லை; இயற்கை நம் உள்ளே தீராத அன்பின் வடிவத்தை ஒளித்து வைத்து வேடிக்கை பார்க்கிறது.அதனை உணரவும்,வெளிக்கொணரவும்,அமுதவனின் வாழக்கை போல பன்னிரு அத்தியாயங்கள் நமக்கும் தேவைப்படலாம்...ராமின் பேரன்பு, பிரதிபலிக்கும் கண்ணாடியாய் என்னுள்ளில் ...

CREDITS:Google




13 comments:

  1. Hello, I read your blog like every week. Your humoristic style is awesome, keep it up!
    I love it when people get together and share opinions. Great
    site, keep it up! Hi, i read your blog occasionally and i own a
    similar one and i was just curious if you get a lot of spam feedback?

    If so how do you protect against it, any plugin or anything you can suggest?
    I get so much lately it's driving me insane so any help is very much appreciated.

    http://cspan.org/

    ReplyDelete
  2. You need to take part in a contest for one of the finest blogs on the internet.
    I will recommend this website!

    ReplyDelete
  3. As I website owner I think the subject material here is very wonderful,
    appreciate it for your efforts.

    ReplyDelete
  4. You ought to be a part of a contest for one of the greatest
    sites online. I will highly recommend this blog!

    ReplyDelete
  5. You have made some decent points there. I looked on the net
    to find out more about the issue and found
    most people will go along with your views on this website.

    ReplyDelete
  6. Wow, this post is good, my sister is analyzing these things, therefore I am going to let know her.

    ReplyDelete
  7. I am really inspired along with your writing skills and also with the format for
    your weblog. Is that this a paid subject or did you modify it yourself?
    Either way keep up the excellent quality writing, it's rare to peer a nice weblog like
    this one nowadays..

    ReplyDelete
  8. This design is steller! You obviously know how to keep a reader entertained.
    Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost...HaHa!) Fantastic job.
    I really loved what you had to say, and more than that, how you presented it.

    Too cool!

    ReplyDelete
  9. Wonderful goods from you, man. I have take note your stuff
    previous to and you're simply too magnificent. I actually
    like what you've received right here, certainly like what you are saying and
    the best way by which you assert it. You are making it entertaining and you continue
    to take care of to keep it sensible. I cant wait to
    read far more from you. That is actually a great site.

    ReplyDelete
  10. I saw a lot of website but I believe this one has something extra in it.

    ReplyDelete
  11. I have been reading out some of your posts and i can claim pretty clever stuff.
    I will make sure to bookmark your blog.

    ReplyDelete
  12. It is not my first time to pay a visit this site,
    i am browsing this website dailly and take fastidious facts from here daily.

    ReplyDelete
  13. Hey there, I think your site might be having browser compatibility issues.
    When I look at your blog site in Firefox, it looks fine but when opening in Internet Explorer, it has some
    overlapping. I just wanted to give you a quick heads
    up! Other then that, superb blog!

    ReplyDelete